வியாழன், 4 அக்டோபர், 2012

மூட்டைபூச்சியையும் கடவுள் படைத்தார் எனில் அதை நாம் நசுக்குவது சரியா?

 
எல்லா உயிரினங்களுக்கும் அதிபதியாக மனிதரைப் படைத்தாலும் நாம் விரும்பியவாறு உயிரினங்களை கொல்ல அல்லது கொடுமைப்படுத்த, மனிதருக்கு உரிமையில்லை. அவைகளும் வாழவேண்டுமென்றே கடவுள் படைத்துள்ளார். இருந்தாலும் நமது உணவிற்காக கொல்வதும் அல்லது நமது அன்றாட வாழ்விற்கு பெரும் இடைஞ்சலாக இருக்கும் சூழ்நிலைகளில் அதை அப்புறப்படுத்துவதுவதோ அல்லது கொல்வதோ குற்றமாகாது. ஈக்கள் வாழ வேண்டிய இடம் நமது வீடு அல்ல. அதனால் வீட்டிற்குள் புகும் ஈக்களையெல்லாம் கொல்வதும் சரியான செயல் ஆகாது. ஈக்கள் வராமலிருக்க நாம் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக்கொள்வதும் உணவு வகைகளை மூடிவைப்பதும் நாம் செய்யும் மேலான செயல்களாகும். நமக்குத் தீங்கிளைக்கும் விலங்குகளை கொல்லாமல், அவைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளைச் செய்வதே சரியான வழியாகும். கூடுகட்டும் சிலந்திப் பூச்சிகளை அழிப்பதை விட்டு விட்டு அவை கூடுகட்டாமலிருக்க அடிக்கடி சுத்தம் செய்வது நற்செயலாகும். தலைமுடியில் வாழும் பேனுக்கும், மூட்டை பூச்சிக்கும் இது பொருந்தும்.

கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார். -தொடக்க நூல் 1:28  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு