சனி, 11 மார்ச், 2017

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு



தவக்காலம் இரண்டாம் ஞாயிறுதிருவழிபாடு ஆண்டு - A (2017-03-12)
www.tamilcatholicnews.com


1.திருப்பலி வாசக விளக்கவுரை
தொடக்க நூல் பதினோராம் அதிகாரம் ஆபிராமை அறிமுகப்படுத்துகின்றது, இருப்பினும் பன்னிரண்டாவது அதிகாரத்தில்தான் ஆபிராம் கடவுளை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் ஆபிராம் ஆபிரகாமாய் மாறி அவருடைய இறப்பு வரை தொடர்கிறது. இன்று அவர்க்கும் கடவுளுக்கும் இடையிலான உறவு, அவருரடைய இறப்பின் பின்னரும், பல ஆயிரம் வருடங்களைக் கடந்தும் வாழ்ந்து வருகிறது. ஆபிராம் אַבְרָם, தெராவின் மகன், சாராவின் கணவர் இவருக்கு இஸ்மாயில் மற்றும் ஈசாக்கு என்று மூத்த பிள்ளைகள் இருந்தனர். ஆபிரகாம், யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் போன்ற மூன்று மதங்களின் பிதாவாகக் கருதப்படுகிறார். இஸ்ராயேலர்கள் தங்கள் வழிமரபை ஈசாக் வழியாக காண்கின்றனர், இஸ்லாமியர்கள் தங்கள் வழிமரபை இஸ்மாயேல் வழியாக காண்கின்றனர், ஆனால் கிறிஸ்தவர்கள் தங்கள் வழிமரபை நம்பிக்கை வழியாக தொடர்கின்றனர்.
வழங்குவது :அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி
click here :http://tamilcatholicnews.com/sundaySermon/JeganKumarFr/65.html



2.மனிதனாய் எழுவோம் நிமிர்வோம் மிளிர்வோம்
ஞாயிறு திருப்பலிக்காக Fr.Alexander Mariadass தயாரித்து வழங்கும் காணொளி மறையுரை.
வழங்குவது :Rev.Fr.Alexander Mariadass Rome, Italy
click here :http://tamilcatholicnews.com/sundaySermon/AlexanderMariadassFrIndividuals/73.html



3.மாற்றங்கள் வாழ்க்கையை அழகுபடுத்துகின்றன!
இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே! நம்முடைய அன்றாட வாழ்க்கையை சற்று உற்று நோக்கினால் எங்கு பார்த்தாலும் எதைப் பார்த்தாலும் மாற்றங்கள் இருப்பதை நம்மால் காணமுடியும். இன்றைய நம்முடைய உலகமானது ஒவ்வொருநாளும் மாறிக்கொண்டே இருக்கிறது. நேற்று இருந்தது இன்று இல்லை, இன்று இருப்பது நாளைக்கு இருக்குமா என்ற ஒரு கேள்வியில் தான் நமது வாழ்க்கை பயணித்துக் கொண்டிருக்கிறது. கருப்பையில் இருந்து கல்லறை வரை எங்கு பார்த்தாலும் ஒரே மாற்றம். குழந்தைகள் கருத்தரிப்பதிலே மாற்றங்கள்> குழந்தையின் நடையிலே மாற்றம்> அதன் உடையிலே மாற்றம், பாவனைகளில் மாற்றங்கள்.
வழங்குவது :அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
click here :http://tamilcatholicnews.com/sundaySermon/SahayaselvarajFr_Tamil/3.html



4.உள் ஒளி
இன்று மாலை என் பழைய புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அருள்பணியாளர் ஒருவர், 'இந்த ஃபோட்டோவுல வெள்ளையா (முகம்) இருக்கிறது இப்போ கறுப்பாவும், கறுப்பா (தலைமுடி) இருக்கிறது இப்போ வெள்ளையாவும் இருக்கு' என்றார். தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றில் இயேசுவின் உருமாற்ற நிகழ்வை தியானிக்கின்றோம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தன் நண்பர் பற்றி என் நண்பர் நேற்று பேசிக்கொண்டிருந்தார். பருமனான உடல் கொண்டிருந்த அவரது நண்பர் புற்றுநோயால் அவதிப்பட்டுக் கிடக்கிறார் எனவும், அவர் மிகவும் மெலிந்து விட்டார் எனவும், அவரது முதுகு தண்டுவடம் கூட வெளியே தெரிகிறது எனவும் சொன்னார். நம் கண்முன்னாலேயே மனிதர்களின் உருவம் மாறுகின்றது.
வழங்குவது :அருட்பணி.இயேசு கருணாநிதி
click here :http://tamilcatholicnews.com/sundaySermon/YesuKarunanidhiFr/40.html



5.உனக்கு ஆசி வழங்குவேன்
தவக்காலம் இரண்டாம் ஞாயிறு. உனக்கு நான் ஆசி வழங்குவேன் என்ற இறைவனின் வாக்கு உயிருள்ளது. மனிதனாகிய பிறந்த நமக்கு இறைவன் அனுதினமும் அவருடைய ஆசிரை வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றார். இறைவனின் நமக்கு வழங்கும் ஆசிர்களும் நன்மைகளும் ஏராளம். மனம் மாற்றத்தின் காலத்தில் பயணம் செய்யும் நமக்கு மீண்டும் உறுதி தரும், வாழ்வு தரும் ஆசீரை வழங்குவேன் என்று வாக்குறுதி தருகின்றார். இறைவன் ஆபிராமை நோக்கி கூறும் வார்த்தையை கவணிப்போம். இறைவன் அவரிடம் கூறுவது " உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்கு காண்பிக்கும் நாட்டிற்குச் செல் " என்று கேட்கின்றார்.
வழங்குவது :அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
click here :http://tamilcatholicnews.com/sundaySermon/JophySr/55.html



6. கடந்து செல்லுதல்
உருமாற்றம் அடைதலை தவக்காலத்தின் இரண்டாம் வாரத்தில் தாய்திருச்சபை நம் கண்முன் வைக்கின்றது. பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் உள்ள ஒற்றுமையை நாம் இந்த தவக்கால இறைவாசகங்களில் அதிகமாக உணரலாம். நாம் ஒவ்வொருவருமே நம் முன்னோர்களின் அடையாளம் தாங்கிய புதையல்கள். எடுத்துக்காட்டாக நம்மை பார்த்தவுடன் சிலர் நம் குடும்பத்தைப் பற்றியும், நமது வாழ்க்கை முறையின் செயல்பாடுகளை பார்த்து நாம் நமது மூதாதையர்களை நினைவுப்படுத்தும் மனிதர்களாக தோற்றம் கொடுக்கிறோம் என்று கூறுவர்.
வழங்குவது :அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
click here :http://tamilcatholicnews.com/sundaySermon/KulandaiTheresaSr/45.html



7.BLESSINGS BRINGS TRANSFORMATION
Could you tell me the difference between the transformation and transfiguration?
Transformation implies a remaking of the nature of a person or object.
For example just imagine in the field of communication, olden days people used to communicate through writing letters, latter we had telecom, after that we had land line phones, cell phones, today we have smart phones and in the future we do not know. We see the transformation and progress taking place slowly in our mode of communication. And today we are the witnessing people for the world of transformation. Thus, we see changes taking place every day of our lives. What we see today is completely different than yesterday, and surely it will not be the same tomorrow.

வழங்குவது :Rev.Fr.Vedha Bodhaga Sahaya Selvaraj(OFM Cap)
click here :http://tamilcatholicnews.com/sundaySermon/SahayaselvarajFr_English/12.html





8.ஆறுதலின் நேரம்

வழங்குவது :www.tamilcatholicnews.com
click here :http://tamilcatholicnews.com/tamil/spiritual/AaruthalinNeram.html


9.ஞாயிறு வானொலி மஞ்சரி

வழங்குவது :www.tamilcatholicnews.com
click here :http://tamilcatholicnews.com/tamil/spiritual/sundaymeditation.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு