வெள்ளி, 7 ஏப்ரல், 2017

இளையோருடன், திருத்தந்தை மேற்கொள்ளும் திருவிழிப்பு வழிபாடு


இளையோருடன், திருத்தந்தை மேற்கொள்ளும் திருவிழிப்பு வழிபாடு

ஏப்ரல் 9, குருத்தோலை ஞாயிறன்று கொண்டாடப்படும் 32வது உலக இளையோர் நாளுக்கு முந்திய நாள், சனிக்கிழமை, உரோம் மறைமாவட்டம், மற்றும், இலாசியோ பகுதி மறைமாவட்டங்களைச் சேர்ந்த இளையோருடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருவிழிப்பு வழிபாட்டை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 8, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு, புனித மேரி மேஜர் பசிலிக்காவில் நடைபெறவிருக்கும் இந்த திருவிழிப்பு வழிபாடு, இளையோரை மையப்படுத்தி, 2018ம் ஆண்டு, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கும், 2019ம் ஆண்டு, பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளுக்கும் முன்னேற்பாடாக மேற்கொள்ளப்படும் முதல் முயற்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயேசுவின் திருத்தூதர்களில், மிக இளையவரும், இயேசுவால் அன்பு செய்யப்பட்டவருமான புனித யோவான், இத்திருவிழிப்பு வழிபாட்டின் மையப்பொருளாகவும், அடையாளமாகவும் இருப்பார். ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்பு குழுவும், பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவையும் இணைந்து, இந்த திருவிழிப்பு வழிபாட்டை நடத்துகின்றன. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு