ஞாயிறு, 23 ஜூலை, 2017

ஆண்டின் பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறு




ஆண்டின் பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறு திருவழிபாடு ஆண்டு - A (2017-07-23) 


1. திருப்பலி வாசக விளக்கவுரை
முதல் ஏற்பாட்டில் ஒரே கடவுள் நம்பிக்கையை, பல கடவுள் நம்பிக்கை சதாரணமாக இருந்த சூழலில் தக்க வைக்க மிகவே போராடினார்கள். இஸ்ராயேலை சுற்றியிருந்த மக்கள் தங்கள் அரசர்களின் ஆட்சி வானத்திலிருக்கும் தங்கள் தெய்வங்களின் அடையாளம் என கருதினார்கள். வானத்தில் நல்ல தெய்வங்கள், தீய தெய்வங்களை வென்று நல்லாட்சிகளை நடத்துகிறார்கள் அதன் வெளிப்பாடுதான் மண்ணக அரசு என நம்பினார்கள். இந்த தெய்வங்கள்தான் மண்ணகத்தை உருவாக்கினார்கள் அத்தோடு அவர்கள் ஒவ்வொரு வருடமும் மண்ணகத்தை வளப்படுத்துகிறார்கள் எனவும் நம்பினார்கள். இதால், மண்ணகத்தில் இராணுவங்கள் சண்டைபோடுகின்ற போது அவர்கள் தங்கள் அரசர்களுக்காக மட்டுமல்ல, மாறாக வானகத்திலுள்ள தங்கள் தெய்வங்களுக்காகவும் போராடுகிறார்கள் என இவர்கள் நம்பினார்கள். மன்னக வெற்றியோ அல்லது தோல்வியோ, அந்தந்த தெய்வங்களின் தோல்விகள் அல்லது வெற்றிகள் என கருதப்பட்டன.
வழங்குவது :அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி
click here :http://tamilcatholicnews.com/sundaySermon/JeganKumarFr/87.html



2.ஞாயிறு கவிதைச் சரம்-கோதுமை... கடுகு... புளிப்பு மாவு...
நன்மையின் ஊற்றான இயேசு
நாம் நன்மையில்
வேரூன்றி வாழ்ந்திட
உந்துசக்தி அளிக்கிறார்…
கடவுள் நம்
எல்லோர் மீதும்
கருணையின் கதிரவனாய்

வழங்குவது :சகோ.மாணிக்கம் திருச்சி மறைமாவட்டம்
click here :http://tamilcatholicnews.com/sundaySermon/poem_sunday/poemsunday.html



3.அவசியம், அவசரமில்லை - அவருக்கு!
ரபலமான நூல், தெ ஸெவன் ஹேபிட்ஸ் ஆஃப் ஹைலி இஃபக்டிவ் பீப்ள். இந்த நூலை 'அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்' என்று தமிழாக்கம் செய்துள்ளனர். இந்த நூலில் 3ஆவது ஹேபிட்டாக - பழக்கமாக, 'முதன்மையானதை முதன்மையானதாக வையுங்கள்' ('Put First Things First) என பதிவு செய்கிறார். இந்த கருதுகோளை விரிவாக்க அவர் 'அவசியம்' (important), 'அவசரம்' (urgent) என்ற இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்தி நான்கு கட்டங்களை வரைகின்றார்: (1) 'அவசியம் - அவசரம்,' (2) 'அவசியம் - அவசரமில்லை,' (3) 'அவசியமில்லை - அவசரம்,' மற்றும் (4) 'அவசியமில்லை - அவசரமில்லை.'
வழங்குவது :அருட்பணி.இயேசு கருணாநிதி 


4.விண்ணரசு மண்ணரசு ஆகுமா?
இறைஇயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே! அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா? நாம் ஏன் ஜெபிக்கின்றோம்? எதோ ஒரு கருத்துக்காக, நினைத்தது நடக்க வேண்டும் என ஜெபிக்கின்றோம். நாம் நினைத்தது நடக்கவில்லையென்றால் யாராவது ஜெபிப்பார்களா? நிச்சயம் மாட்டார்கள். ஆக நாம் ஜெபிக்கின்ற போது எதோ மற்றங்கள் நிகழ்கின்றன. எனவு நாம் அனைவருமே ஜெபிக்கின்றோம். உலகில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் சேர்ந்து ஜெபிக்கும் ஜெபம் எது? கர்த்தர் கற்பித்த ஜெபம். அதிலே “விண்ணுலகில் நிறைவேறுவது பேல மண்ணுலகிலும் நிறைவேறுக” பரலோகத்தில் செய்யப்படுவது போல புலோகத்திலும் செய்யப்படுவதாக! என்று ஒவ்வொரு முறையும் நாம் ஜெபிக்கின்றோம். அப்படியானால் கடவுளின் அரசு அல்லது கடவுளின் உலகம் விண்ணகத்தில் எப்படி இருக்கின்றதோ அதைப்போலவே மண்ணுலகிலும் அவரது விண்ணரசு இருக்க வேண்டும் என தினந்தோறும் நாம் ஜெபிக்கின்றோம். அப்படியானால் விண்ணரசை, கடவுளின் அரசை மண்ணகத்தில் நிலைநாற்ற முடியுமா?
வழங்குவது :அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு