அன்பே உருவானவர் கடவுள். அந்த அன்பை பகிர்ந்து கொள்ள கடவுள் உலகையும் மனிதனையும் படைத்தார். உலகையும் அதில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் படைத்து இறுதியாக மனிதனையும் படைத்து அனைத்தையும் மனிதனுக்குக் கொடுக்கிறார். இயற்கையோடும், மற்ற விலங்குகளோடும், மற்ற மனிதர்களோடும் மனிதன் அன்பிபோடும் மகிழ்ச்சியோடும் வாழ்ந்து இறைப் பதம் அடையவே கடவுள் உலகைப் படைத்தார்.
அப்பொழுது கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்" என்றார். -தொடக்கநூல் 1:26